வியாழன், 20 ஆகஸ்ட், 2009

பச்சோந்தியின் நிற மாறுதல்

நம்மில் பல பேர் பச்சோந்தி போல அடிக்கடி குணம் மாறுவார்கள். நாம் பச்சோந்தி என சொல்லக் கேட்டிருக்கிறோமே தவிர உண்மையான பச்சோந்தியை பார்த்திருப்பது அரிது. அது தன் நிறம் மாறுவதைக் கண்டிருப்பவர்கள் அரிதிலும் அரிதாயிருக்கும். அவர்களுக்காக ஒரு பச்சோந்தியும் அது எவ்வாறெல்லாம் நிறம் மாறுகிறதென்பதையும் பற்றிய விளக்கப் படம்.

எப்படி இருக்கிறதென சொல்லுங்களேன்.

இவ்வளவு விரைவாக ஆண்கள் ஆடை மாறுவதே கடினம். அதிலும் பெண்கள் இவ்வளவு அதி விரைவாக ஆடை மாற முடிந்தால் பெரு வாரியான வெளி செல்லும் நிகழ்வுகள் சுமுகமாகவே இருக்கும். என்ன சொல்கிறீர்கள்.

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

ஒரு குப்பை வண்டி நிறைய படிப்பு






விமான நிலையம் போக ஒரு வாடகைக் காரில் போனோம். இங்கு மூவழிச்சாலைகள். மெதுவாக செல்வதற்காக உள்ள வலது புறச்சாலையில் டாக்ஸி சென்று கொண்டிருந்தது. திடீரென ஒரு கருப்பு நிற கார் பார்க்கிங்கிலிருந்து தாவிக் குதித்து வெளிவரவும், எமது காரோட்டி படாரென பிரேக்கை அழுத்த, கார் வழுக்கி, அரை வட்டமடித்துத் திரும்பி அந்த கருத்த காரின் பின்னால் சில அங்குல இடைவெளியில் நின்றது.



கருத்த வண்டியை ஓட்டியவர் தம் காருக்கு வெளியே தலை நீட்டி எம்மை நோக்கி கேவலமாக சைகை செய்ததோடு ஏதேதோ திட்டினார்.
டாக்ஸி டிரைவரோ புன்னகைத்தவாரே அவரை நோக்கி கையசைத்தார். அதாவது வெகு சிநேகத்தோடு...

"என்ன இப்படி இருக்கின்றீர்கள். இன்னும் கொஞ்சமிருந்தால் அவன் உன் காரை நசுக்கி விட்டு நம்மையெல்லாம் மருத்துவமனைக்கு அனுப்பி இருப்பான்" என்று டிரைவரிடம் சொன்னேன்.

அந்த டிரைவர் எனக்குச் சொல்லித் தந்ததுதான் ஒரு குப்பை வண்டி படிப்பு

இங்கே பல மனிதர்கள் குப்பை வண்டி போலத்தான்.
அவர்கள் எண்ணங்களில், நிறைந்த குப்பைகளையும், மனம் முழுக்க ஏமாற்றத்தையும், வெறுப்பையும் கோபத்தையும் சுமந்து திரிகின்றனர். அவைகள் மிகக்கூடுதலாகிப் போனவுடன் அவற்றை அவர்கள் எங்காவது வீசப் பார்க்கின்றனர். சில நேரங்களில் உங்கள் மீது.

அவை தனிப்பட்ட உங்கள் மீது, வீசப்பட்டதாக உணராதீர்கள்.
சும்மா புன்னகைத்து, அவர்களை வாழ்த்தி, விலகுங்கள்
அவர்களின் குப்பைகளை நீங்கள் சுமந்து, பின்னர் அதை உங்கள் வீடுகளிலும், வேலை செயயும் இடங்களிலும், உங்கள் தெருக்களிலும் வீசாதீர்கள்.
சுருக்கமாகச் சொன்னால், வெற்றி பெரும் மனிதர்கள் இந்தக் குப்பை வண்டிகள் அவர்களின் நல்ல நாளைப் பாழாக்க விட மாட்டார்கள்.
ஒவ்வொரு விடியலையும் மனம் வருந்தி எதிர் கொள்ள நமக்கு வாழ்நாள் போதாது நண்பர்களே.

உங்களை நல்ல முறையில் நடத்துபவர்களுடன் அன்பாயிருங்கள். அஃதல்லாத மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

வலையுலகிலும் இதை கடைபிடித்தால், வலையுலகம் எவ்வளவு மகிழ்ச்சியான அனுபவமாய் இலங்கும்.

வாழ்க்கையில் நாமாக உருவாக்கிக் கொள்வது வெறும் பத்து சதம்(10%)தான். மிகுதி தொன்னூறு சதம் (90%) வாழ்க்கையை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கின்றீர்கள் என்பதைப் பொறுத்தது.

இனி உங்களிடம் வரப்போகிற மகிழ்ச்சியான, குப்பைகளற்ற நாளுக்காக என் வாழ்த்துக்கள்.

சனி, 31 ஜனவரி, 2009

நீங்களும் இப்படி யோசிப்பீங்களா?




இப்படி யோசித்திருக்கிறீர்களா?
1. வெயிலில் அதிகம் காய்ந்தால் முடி வெளுக்கிறது ஆனால் ஏன் உடல் தோல் கருக்கிறது?
2. பெண்கள் கண்ணுக்கு மையிடும்போது ஏன் வாயைத் திறந்து வைத்துக் கொள்கிறார்கள்?
3. Abbreviation ஏன் இவ்வளவு பெரிய வார்த்தையாய் இருக்கிறது?
4. டாக்டர்கள் தாங்கள் செய்வதை ஏன் practice என்று சொல்கிறார்கள்?
5. உங்கள் பணம் முழுவதையும் முதலீடு செய்பவர்களுக்கு ஏன் broker என்று பெயர் வைத்திருக்கிறார்கள்?
6. கணிணியில் windowsஐ மூடுவதற்கு ஏன் Start பட்டனை அழுத்த வேண்டியிருக்கிறது?
7. ஏன் எலுமிச்சை ஜூஸை செயற்கை flavourல் செய்து விட்டு, பாத்திரங்கள் கழுவும் liquidல் உண்மை எலுமிச்சை பழத்தை பயன்படுத்துகிறார்கள்?
8. ஏன் வண்டிகள் மிக மெதுவாக பயணிக்கும் நேரத்தை rush hour என்று சொல்கிறார்கள்?
9. 'சுவை கூட்டப்பெற்ற புதிய வகை' என்று நாய் உணவில் எழுதியுள்ளார்களே, யார் சுவை பார்த்தார்கள்?
10. விமானத்தில் ஏன் அழிக்க முடியாத வகையில் கருப்புப் பெட்டியை மட்டும் செய்கிறார்கள்? முழு விமானத்தையும் செய்தாலென்ன?
11. Con என்ற வார்த்தை Pro என்ற வார்த்தைக்கு எதிரானதென்றால் Progressக்கு Congress எதிரானதா?
12. ஒட்டி கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை ஏன் Apartments என்கிறார்கள்?
13. விமானத்தில் பறப்பது பாதுகாப்பானதென்றால் விமான நிலையத்தை ஏன் terminal என்கின்றார்கள்.?