புதன், 26 நவம்பர், 2008

எல்லாமிருந்தும்

ஒரே மகள் ரொம்பச் செல்லம்
கண்மணி என்பார் தந்தை
அருமை மகளென்னை செல்லமே
என்றழைத்த வாய் மாறாத தாய்
கோபமிருந்தாலும் அன்பே என்றே
அன்பாய் அழைப்பார் கணவர்
பாப்பா என்ற பாசத்தில் குறை வைப்பதில்லை தமையன்
மாமி என்பாள் மரியாதையாய் குட்டச்சி, என் அண்ணன் மகள்
மச்சி மகளுக்கு நான் சாச்சி
ஆயிரம் பேர் அழைத்த போதும்
எல்லாமிருந்தும் எதுவும் அற்ற வெறுமையாய்
அம்மா என்றழைக்கும் மகவுக்கு
வரம் கேட்டு தவமிருக்கும் நான்